எட்ட இருந்து பார்த்தாக்க
எல்லாம் அழகுதான்
கிட்ட போயி நின்னாக்க
வெறும் கானல் நீருதான் !
எட்ட இருந்தா
எல்லாமே தேவ அமுதந்தான் !
முட்ட முட்ட குடிச்சிடவே
மனதில் என்னந்தான் ஒரு
சிப்பு சிப்பி விட்டாலோ
எட்டிக் காயிதான் !
கருப்பான முடியின்னு
மினுமினுப்புதான்
உருப்படியா ஒண்ணுமில்ல
மருவுதாணிதான் !
அழகுன்னு
கருவம் கொண்டு
அலைச்சல் வீணுதான் !
பழகிடவே கிட்ட போனா
சகிக்க வேணுந்தான் !
வெளி அழக பார்க்காதே
வெளுத்து போகுந்தான்
உள்ள உள்ள அழகுதான் மனச
உருக வைக்குந்தான் !
உதட்டுக்கு சிவப்பு பூச
எதற்கு சாயந்தான்
கள்ளமில்லா புன் சிரிப்பு
என்றும் சிவப்புதான் !
பணக்கார சொத்து எல்லாம்
பகல் வேடந்தான் !
அழகு பணம் அதிகாரம்
கர்வம் எதுக்குதான் !
அமலாக்க துறை வந்தா
அம்புட்டும் வெளுச்சந்தான் !
குடும்பத்துக்கு வேண்டியது
கொஞ்சம் காசுதான் !
அடுக்கடுக்காக எதற்கு பணம்
படுத்தா செலவுதான் !
கொஞ்சம் போறுமுன்னு
நினைச்சு விட்டா
அஞ்ச வேணாந்தான் !
பஞ்சு மூட்ட அதுக்குள்ள
தண்ணி விட்டாக்கா
இஞ்சு கூட இழுக்க படும்
பெறும் சிரமம்தான் !
தூர நின்னு பார்த்தாக்க
பச்ச புல்லுதான் !
கரைய கடந்து வந்துபுட்டா
காஞ்ச நெல்லுதான் !
போதுமப்பா போதுமப்பா
கூழும் கஞ்சியும் !
வாதம் பித்தம் வாராது
வேதம் இதுவேதான் !
![]()




Users Today : 118
Users Yesterday : 188
Total Users : 46345
Views Today : 336