வரிகள் : அருணாச்சல கவிராயர்
இசை பாடலாக்கம் : கவியோகி
துணைவந் தருள்புரிகுவாய் அனுமந்தா நீ
துணைவந் தருள்புரிகுவாய்
துணைவந் தருள்வாய் நல்ல சொற்பொருளதுபுல்ல
இணையொன்றிலாத வல்ல ராமநாடகம் சொல்ல
துஷ்டவாலி தோழமையை விண்டோனே – விண்டு
சுக்கிரீவன் தோழமையை கொண்டேனே – வெகு
இட்டமா ராகவனைப் போய் கண்டோனே – அவன்
செப்பிய சொல்லமிர்தத்தை உண்டோனே – சுக்கிரீவன்
கஷ்டமும் அரசிழந்த
நஷ்டமும் அவனிருப்பும்
சட்டமாச் சொன்ன மாருதி
இட்ட கருணை வாருதி
துணைவந் தருள்புரிகுவாய் – அனுமந்தா நீ
துணைவந் தருள்புரிகுவாய்
அஷ்ட திக்கில் தென்திசை உகந்தோனே -சீதைக்கா
அரிய பிலத்தினுட் புகுந்தோனே- அப்போது
பொட்டெனப் பூமியினை பிளந்தோனே – உயிரைப்
போக்கவே மிகமனம் தளர்ந்தோனே – சம்பாதி
எட்டவே இருந்துமென்ன
கிட்டவே வரஅவற்குப்
பட்டதைச் சொல்லும் தூயனே
முட்டிலா ஆஞ்சநேயனே
துணைவந் தருள்புரிகுவாய் – அனுமந்தா நீ
துணைவந் தருள்புரிகுவாய்
உக்கிரமா வில்வசொரூபம் எடுத்தோனே – மயேந்திரத்
துதைந்து சடலைத்தாண்டி விடுத்தோனே – பொல்லாத
அக்கிரம லங்கணியைக்கீழ் படுத்தோனே நற்றிகு
ஆழியைத் தேவிகையினில் கொடுத்தோனே – ஆறுபோல்
மிக்கவே ரத்தங்கள் வாயால்
கக்கவே ராட்சத ரெல்லாம்
மக்கவே செய்யும் ருத்திரனே
முக்கியமாம் வாயுபுத்திரனே
துணைவந் தருள்புரிகுவாய் – அனுமந்தா நீ
துணைவந் தருள்புரிகுவாய்
தேவிசூடாமணி கையில் தரித்தோனே சொன்ன
சேதிகள் எல்லாம் அங்கி கரித்தோனே -படு
பாவிராவணன் லங்கையை எரித்தோனே ராமன்
பக்கல்வந்துற்ற சேதிகள் விரித்தோனே இந்த
பூவுலகத் தோகும் தேவர்
கோவும் முனிக்கணமும் பராவிய சிரஞ்சீவியே
மேலிய என தாவியே
துணைவந் தருள்புரிகுவாய் – அனுமந்தா நீ
துணைவந் தருள்புரிகுவாய்
அருமையாம் சஞ்சீவி மலையை ஏற்றோனே -பிர்ம்ம
அஸ்திர வேதைக ளெல்லாம் தீர்த்தோனே – சீதையை
உரிமையாம் ராகவன் பக்கல் சேர்த்தோனே – பரதன்
உயிரை விடுமுன்னமே போய்க் காத்தோனே தவத்தில்
பெருமையார் முனி விருந்தினில்
தரும ராமனோடருந்தின
ஒருமையாற் சஞ்சீவி ராயனே
பிரம பட்டம் பெறும்உ பாயனே
துணைவந் தருள்புரிகுவாய் – அனுமந்தா நீ
துணைவந் தருள்புரிகுவாய்
![]()