இன்றே நினைக்க !

அந்த ஒரு நாள்

 

பல்லு விழும்போது,

இந்த பல்லைத் தானே தினமும்

காலை, மாலை விழுந்து விழுந்து

தேய்ச்சோம்னு நினைப்போம் !

 

அந்த ஒரு நாள்

 

நரைத்த தலை முடி

கொட்டும் போது,

இந்த முடியைத் தானே

ஷாம்புவை கொட்டி கொட்டி

வளர்த்தோம்னு

நினைப்போம் !

 

அந்த ஒரு நாள்

 

கை சருமங்களை

தடவும்போது

சுருங்கும்,

அப்போது

இந்த சருமத்தை தானே

சரக் சரக்னு

எண்ணெய் போட்டு

தடவினோம்னு

நினைப்போம் !

 

அந்த ஒரு நாள்

 

கண்களின் பார்வை

மங்கும்போது,

இந்த கண்ணைத்தானே

கண்ணுக்கு கண்ணாக

பார்த்து பார்த்து

கவனித்தோம்னு

நினைப்போம் !

 

அந்த ஒரு நாள்

 

பேசும்போது

வாய் குழறினால்,

இந்த வாயால்தானே

இல்லாததும் பொல்லாததும்

பேசினோம்னு

நினைப்போம் !

 

அந்த ஒரு நாள்

நினைப்பை

இன்றே

நினைத்தால்

 

அந்த ஒரு நாள்

 

இன்னினைப்புகள்

வராமல் தவிர்க்கலாம் !

இறைவன் பாதம்

மறக்காமல்

இருக்கலாம் !

 

யோசனை : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம்

 

Loading

admin

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments