பேச்சற்ற மோன நிலை !

குறவன் குறத்தி பாடல்

குறவன் : நிக்காத என் மனச நிலை நிறுத்த வேண்டுமோ குறத்தி ?

குறத்தி : நிக்காத மனசு தன்ன நிறுத்தினா நன்மைதான் குறவா !

குறவன் : நில நிறுத்த சொல்லும் வேதம் நூறு விதமாக கூறுதே குறத்தி ?

குறத்தி : எதேனும் ஒரு வழிய நன்னா பிடிச்சுக்கோ குறவா !

குறவன் : என்ன வழி எனக்கு சுலபம்முன்னு சொல்லுவாய் குறத்தி யோகம் கர்மம் எதுவும் எனக்கு காதுல ஏறல குறத்தி

குறத்தி : ராம ராம சங்கரான்னு சொன்னா போதுமே குறவா வேற யோகம் கர்மம் எதுவும் உனக்கு வேணுமோ குறவா

குறவன் : இரண்டு தடவ சொல்லும்போது உலகம் என்ன இழுக்குதே குறத்தி

குறத்தி : இழுத்தாலும் இழுக்கட்டும் இன்னொரு தரம் சொல்லலாமே குறவா !

குறவன் : நாளைக்கு சொல்லுறேன் இன்று சோம்பலா இருக்குதே குறத்தி

குறத்தி : இப்போதோ சொல்லி விடு நாளை இருப்போமா என்று தெரியாதே குறவா

குறவன் : இறந்த பின்னால் எங்கு செல்வோம் உனக்கு தெரியுமோ குறத்தி

குறத்தி : பாவ புண்ணிய பலனுக்கு தகுந்த பிறவி கிடைக்குமாம் குறவா

குறவன் : பிறவியே வேண்டாமுண்ணு எனக்கு தோணுதே குறத்தி

குறத்தி : நல்லதுதான் நினைப்பு அது லேசுலே வராது குறவா

குறவன் : வேதம் சாத்திரம் ஏதும் நான் படிக்கலயே குறத்தி

குறத்தி : நான் மறைகள் முடிவு அது நான்கற போதம் தானே குறவா

குறவன் : எனக்குள்ளே இருந்தாலும் அது எனக்கு தெரியலயே குறத்தி

குறத்தி : எனக்கு தெரியல ன்னு சொல்லரயே அந்த எனக்கு யார்னு பாரேன் குறவா

குறவன் : எனக்குள்ளே பார்த்து விட்டால் பின்னே நமக்குள் பேச்சு ஏது குறத்தி

குறத்தி : பேச்சற்ற மோன நிலை அதுவே முக்தி என்பார் குறவா

Loading

admin

Author: admin

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Parvathi Ganesan
Parvathi Ganesan
4 months ago

ஜயசக்தி.
பேச்சற்ற போன் நிலை பெற எளிமையாக விளக்கியுள்ளீர்கள்.
நன்றி கவியோகியாரே