மெட்டு : கண்ணன் வருகின்ற நேரம்
பல்லவி
குருநாதன் வருகின்ற நேரம்-மறையோதும்
முனிவர் கண்டு பிடித்தது பாரும்
வானத்திடை மோனக்குரு வாசித்தது
துயர்ராரும்
தேடக் கிடையா தொரு – மாட
வீதியெல்லாம் விழி காணும்
சரணம் 1
மெல்லப்பிறவிவிட்டோடும் துதி பாடும்
மனம் பொங்கி தங்கி விரிந்தாடும் – மெல்ல
விதி மாறிடும் அடியாரவர் மனமானது இது போல் என
துள்ளிதுள்ளிக் குதித்தோடும் – சகம்
மெல்ல மெல்லம மறைந்தோடும்
சரணம் 2
அன்பின் உரு போலும் அகிலம் இணை இல்லை – என்று
கண்டதும் மறையோதும் எல்லை – இது
முதலோ அல்ல முடிவோ எனக்குருவைத் துதி மனமே
வரும் காலமும் மெய்யெல்லம் அறிவேன்
எங்கள் குருவன்றி வேறு துணை இல்லை
![]()




Users Today : 33
Users Yesterday : 31
Total Users : 52244
Views Today : 73